×

ஆண் நண்பரிடம் ஏமாந்த ராணுவ வீரரின் மனைவி தற்கொலை

ஒடுகத்தூர்: வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த எல்லப்பன்பட்டியை சேர்ந்தவர் பாலாஜி(35), ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரேகா(30). இவர், மராட்டியபாளையம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி குமரேசனுடன்(30) நட்பாக பழகியுள்ளார். இதனை பயன்படுத்தி அவர் ரேகாவிடமிருந்து அவ்வப்போது நகை, பணம் என்று 11 1/2 சவரன் மற்றும் ரூ.1.15 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. கணவருக்கு சந்தேகம் வரவே நகை, பணத்தை திருப்பி கொடுக்கும்படி ரேகா கேட்டுள்ளார். இதனால், இரண்டு குடும்பத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஊர் பெரியோர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர். அப்போது, கூடிய விரைவில் நகை, பணத்தை திருப்பி தருவதாக குமரேசனிடம் எழுத்து பூர்வமாக எழுதி வாங்கியுள்ளனர். ஆனால், தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால், ரேகா குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அப்போது குமரேசன் தான் வாங்கிய நகை மற்றும் பணத்தை 17ம் தேதி தருவதாக ஒப்புக்கொண்டார். இந்நிலையில், இதுவரை நகை, பணம் வராததால் நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனவேதனையடைந்த ரேகா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

The post ஆண் நண்பரிடம் ஏமாந்த ராணுவ வீரரின் மனைவி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Army ,Odugathur ,Balaji ,Ellappanpatti ,Vellore district ,Rekha ,
× RELATED ஒடுகத்தூர் அருகே வனப்பகுதியில்...